தேனியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 4 பவுன் சங்கிலியை, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றுள்ளனர்.
பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி சௌமியா பிரித்தி (25). இவர், தேனி நகராட்சி கர்னல் பென்னிகுவிக் நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து, சிவாஜி நகர் நோக்கி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, சௌமியா பிரித்தியை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர் அணிந்திருந்த 4 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சௌமியா பிரித்தி அளித்த புகாரின்பேரில், தேனி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.