தேனி அருகே பூதிப்புரத்தில் கஞ்சா விற்றவரை வெள்ளிக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
பூதிப்புரத்தைச் சேர்ந்தவர் இருளப்பன் மகன் ஆண்டவர் (50). இவர், பூதிப்புரம்-வாழையாத்துப்பட்டி விலக்கு பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்ததாக பழனிசெட்டிபட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அங்கு சென்று, ஆண்டவரை கைது செய்தனர். மேலும்,
அவரிடமிருந்து ஒன்றே கால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.