கஞ்சா விற்றவர் கைது

தேனி அருகே பூதிப்புரத்தில் கஞ்சா விற்றவரை வெள்ளிக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

தேனி அருகே பூதிப்புரத்தில் கஞ்சா விற்றவரை வெள்ளிக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
 பூதிப்புரத்தைச் சேர்ந்தவர் இருளப்பன் மகன் ஆண்டவர் (50). இவர், பூதிப்புரம்-வாழையாத்துப்பட்டி விலக்கு பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்ததாக பழனிசெட்டிபட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அங்கு சென்று, ஆண்டவரை கைது செய்தனர். மேலும், 
அவரிடமிருந்து ஒன்றே கால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com