என்.ஐ.டி இயக்குநராக யோகராஜ்ஸுட் பொறுப்பேற்பு

காரைக்காலில் இயங்கும் என்.ஐ.டி. இயக்குநராக யோகராஜ்ஸுட் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

காரைக்காலில் இயங்கும் என்.ஐ.டி. இயக்குநராக யோகராஜ்ஸுட் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி) காரைக்காலில் திருவேட்டக்குடி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநராக கூடுதல் பொறுப்பை காலிக்கட் என்.ஐ.டி. இயக்குநர் சிவாஜி சக்கரவர்த்தி
கவனித்து வந்தார்.
இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்.ஐ.டி. இயக்குநருக்கான தேர்வு நடத்தியதில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஹமீர்பூர் என்.ஐ.டி. பேராசிரியராக பணியாற்றி வந்த யோகராஜ்ஸுட் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கான இயக்குநர் பணியாணை வழங்கப்பட்ட நிலையில், காரைக்கால் என்.ஐ.டி.யில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். பதிவாளர் (பொ) ஜி.எஸ். மகாபத்ரா மற்றும் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் அவரை வரவேற்றனர். இவர்களிடையே இயக்குநர் பேசும்போது, காரைக்கால் என்.ஐ.டி.யில் பணியாற்றும் அனைவரும் கூட்டு முறையில் பணியாற்றி, இந்த என்.ஐ.டி.க்கு பெரும் புகழைத் தேடித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து நிறுவன பேராசிரியர்கள், நிர்வாகத்தினருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com