காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் வணிக நிறுவனத்தினர் கடைகள் அமைத்துக்கொள்ள அனுமதிக்கும் பொது ஏலத்தின் மூலம், கோயிலுக்கு ரூ.22.55 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இந்த பொது ஏலம் அம்மையார் கோயில் வளாகத்தில், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) எஸ்.கே.பன்னீர்செல்வம், ஸ்ரீ கைலாசநாதர் கோயில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி ஆகியோர் முன்னி
லையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஏலத்தின் மூலம் ரூ.22.55 லட்சம் கோயிலுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக தனி அதிகாரி தெரிவித்தார். கடந்த ஆண்டு கடைகள் ஏலத்தின் மூலம் ரூ.20.50 லட்சம் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.