காரைக்கால் அருகே ஈவ் டீசிங்கில் ஈடுபட்டது தொடர்பாக இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பேருந்து நிறுத்தத்தில் காரைக்கால் திருநகரைச் சேர்ந்த அபி (எ) அலியாஸ் (22) செவ்வாய்க்கிழமை நின்றுகொண்டு, பேருந்தில் ஏறி, இறங்கும் பெண்களை கிண்டல் செய்துகொண்டிருந்துள்ளார்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கோட்டுச்சேரி காவல்நிலைய போலீஸார், ஈஷ் டீசிங்கில் ஈடுபட்டது தொடர்பாக அபி (எ) அலியாஸை கைது செய்தனர்.