மறுகூட்டல் கோரி விண்ணப்பிப்போருக்காக உரிய தேதிகளை கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கல்வித்துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியோர் மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பினால், 19.5.2017 முதல் 22.5.2017 வரை 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது.
இந்த தேர்வில் தோல்வியுற்றவர்கள் தாங்கள் தோல்வியுற்ற அனைத்துப் பாடங்களையும், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு துணை பொதுத்தேர்வில் எழுதலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.