மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் கவனத்துக்கு...

மறுகூட்டல் கோரி விண்ணப்பிப்போருக்காக உரிய தேதிகளை கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

மறுகூட்டல் கோரி விண்ணப்பிப்போருக்காக உரிய தேதிகளை கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கல்வித்துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியோர் மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பினால், 19.5.2017 முதல் 22.5.2017 வரை 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது.
இந்த தேர்வில் தோல்வியுற்றவர்கள் தாங்கள் தோல்வியுற்ற அனைத்துப் பாடங்களையும், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு துணை பொதுத்தேர்வில் எழுதலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com