அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவ விமானத்தில் வீதியுலா

அம்பகரத்தூரில் நடைபெறும் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழாவையொட்டி தேவ விமானத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

அம்பகரத்தூரில் நடைபெறும் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழாவையொட்டி தேவ விமானத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன் அம்பகரத்தூரில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா மே 1-ஆம் தேதி ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பூச்சொரிதலுடன் தொடங்கியது. கடந்த 15-ஆம் தேதி தீமிதி உத்ஸவம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவ விமானத்தில் வீதியுலா எழுந்தருளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. மின் அலங்கார தேவ விமானத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பத்ரகாளி எழுந்தருளினார். வீதியுலா முடிந்து சனிக்கிழமை அதிகாலை கோயிலை
சென்றடைந்தது.
நாளை புஷ்ப பல்லக்கு: 22-ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 12 மணிக்கு மின் அலங்கார புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23-ஆம் தேதி பகல் 12 மணிக்கு மகிஷ சம்ஹார நினைவு வைபவம்நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com