எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் அ. அல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜனவரி 2018-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித்தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 1.1.2018 அன்று பனிரெண்டரை வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.15 முதல் 25-ஆம் தேதி வரை ஆன்லைனில் காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் (தட்கல் திட்டம்) நவ.27 மற்றும் 29-ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.