விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

காரைக்காலில்  குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில்  குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் சைல்டு லைன் அமைப்பு சார்பில் குழந்தைகள் தினத்தையொட்டி, நவ. 14  முதல் 19-ஆம் தேதி வரை  குழந்தைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முதல் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கருத்துகளைக்கூறி மக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தும் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகத்தில் பேரணியை ஆட்சியர் ஆர். கேசவன் தொடங்கி வைத்து பேசியது:
காரைக்கால் பகுதியில் ஒரு வாரம் நடைபெறும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார் ஆட்சியர் கேசவன்.
பேரணியில், மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ், சைல்டு லைன் பொறுப்பாளர்கள், பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி அம்பேத்கர் சாலை மற்றும் முக்கிய சாலை வழியாகச் சென்று மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com