காரைக்கால் நகரப் பகுதியில் சாலைகள் சீரமைப்பு பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வள்ளலார் நகர் மற்றும் பாலகிருஷ்ணா நகரில் சாலைகள் மேம்பாட்டுப் பணியின்போது விடுபட்ட சாலைகளை சீரமைக்க, சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்எல்ஏ பி.ஆர்.என். திருமுருகன் ரூ. 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
இதில், வள்ளலார் நகர் சாலை ரூ.25 லட்சத்திலும், ராமகிருஷ்ணா நகர் சாலை ரூ.10 லட்சத்திலும் சீரமைப்பதற்கான பணிகளுக்கு பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏ பி.ஆர்.என். திருமுருகன் பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் டி. சுதாகர், நகராட்சி உதவிப் பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்பணிகள் நான்கு மாதங்களில் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.