மின் கட்டணம் செலுத்தாமல் இருந்தால் 10-ஆம் தேதி முதல் இணைப்பு துண்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் மின் துறை செயற்பொறியாளர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர் தங்களது கட்டண நிலுவையை வருகிற 9-ஆம் தேதிக்குள் முழுமையாக செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கட்டணம் செலுத்தாதோர் இணைப்பு 10-ஆம் தேதி முதல் எந்தவித முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.