வேதாரண்யத்தில் பிப். 26-இல் போக்குவரத்து மாற்றம்

நாகை மாவட்டம், வேதாரண்யம், வேதாரண்யேசுவரர் கோயில் தேரோட்டத்தையொட்டி, வேதாரண்யம் பகுதியில் பிப். 26-ஆம்

நாகை மாவட்டம், வேதாரண்யம், வேதாரண்யேசுவரர் கோயில் தேரோட்டத்தையொட்டி, வேதாரண்யம் பகுதியில் பிப். 26-ஆம் தேதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
வேதாரண்யேசுவரர் கோயில் தேரோட்டம் பிப். 26 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பொதுமக்கள் நலன் கருதி அன்றைய ஒரு நாள் மட்டும், வேதாரண்யம் பகுதியில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
இதன்படி, திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யத்துக்கு வாய்மேடு வழியே வரும் பேருந்துகள் ராசாளிக்காடு பெட்ரோல் பங்க் அருகிலும், கோடியக்கரை தடத்திலிருந்து வரும் பேருந்துகள் வேதாரண்யம் எஸ்.கே.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலும், நாகை தடத்திலிருந்து வரும் பேருந்துகள் ஏரிக்கரைக்கு அருகிலும் நிறுத்தப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com