காரைக்கால் மாவட்ட திமுக மகளிரணி நிர்வாகிகள் மாநில திமுக தலைமையால் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் காரைக்கால் திமுக அமைப்பாளரை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
திமுக மகளிரணி செயலர் கனிமொழி, காரைக்கால் மாவட்ட திமுக மகளிரணி நிர்வாகிகளை வியாழக்கிழமை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டார். காரைக்கால் மாவட்ட மகளிரணி அமைப்பாளராக ஜி.வைஜெயந்திராஜன் நியமிக்கப்பட்டார். துணை அமைப்பாளர்களாக ஆர்.ஜெலிலா என்கிற கல்யாணி, ஏ.ஷப்னா மோத்தி, எஸ்.விஜயா சேகர், எஸ்.உமா, என்.சாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச்.நாஜிமை காரைக்காலில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்தனர். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர். இந்தச் சந்திப்பில், மாவட்ட திமுக பொருளர் கே.டி.வி.சங்கர், இலக்கிய அணி அமைப்பாளர் அமுதா ஆர்.ஆறுமுகம், இளைஞரணி அமைப்பாளர் ஐ.முகம்மது பாரூக், தொண்டரணி அமைப்பாளர் கே.கோவிந்தராஜ் மற்றும் திமுக முன்னாள் அவைத் தலைவர் எம்.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். புதிய நிர்வாகிகள் அனைவரும் கட்சியின் வளர்ச்சி, காரைக்கால் பிராந்தியத்தின் மேம்பாட்டுக்காக கடுமையாகப் பாடுபடவேண்டும் என நாஜிம் கேட்டுக்கொண்டார்.