பிரதமர் ஆற்றும் உரையை காரைக்கால் வானொலி நிலையம் ஞாயிற்றுக்கிழமை (மே 27) ஒலிபரப்பு செய்கிறது.
காரைக்கால் வானொலி நிலைய நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவர் ஜி.சுவாமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திரமோடி அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு மன் கி பாத் என்கிற நிகழ்ச்சியின் மூலம் ஆற்றும் உரை ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு ஒலிபரப்பாகும். அதனைத் தொடர்ந்து பிரதமர் உரையின் தமிழாக்கம் மனதின் குரல் என்ற தலைப்பில் ஒலிபரப்பாகும். இந்த மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் அன்றிரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.