முச்சந்தி மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

நாகப்பட்டினம், வெளிப்பாளையத்தில் அருள்மிகு முச்சந்தி மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி பூச்சொரிதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

நாகப்பட்டினம், வெளிப்பாளையத்தில் அருள்மிகு முச்சந்தி மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி பூச்சொரிதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
சித்திரைத் திருவிழா தொடக்கமாக வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமமும், பகல் 12 மணிக்கு அபிஷேகமும் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு அருள்மிகு முச்சந்தி மாரியம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திரளான பக்தர்கள் பங்கேற்று, பூ காணிக்கை அளித்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, சக்தி கரக வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com