நாகப்பட்டினம், வெளிப்பாளையத்தில் அருள்மிகு முச்சந்தி மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி பூச்சொரிதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
சித்திரைத் திருவிழா தொடக்கமாக வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமமும், பகல் 12 மணிக்கு அபிஷேகமும் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு அருள்மிகு முச்சந்தி மாரியம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திரளான பக்தர்கள் பங்கேற்று, பூ காணிக்கை அளித்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, சக்தி கரக வீதியுலா நடைபெற்றது.