மூத்த குடிமக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம்

நாகை மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து வட்டங்களிலும் மூத்த குடிமக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் செப்டம்பர் மாதத்தில்

நாகை மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து வட்டங்களிலும் மூத்த குடிமக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில், மூத்த குடிமக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது. வட்டத்துக்கு ஒரு கிராமத்தில் நடைபெறும் இந்த முகாமில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச கண்புரை நோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
வட்டம் வாரியாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறும் இடம், தேதி விவரம் (வட்டம் : கிராமம் - தேதி) :
குத்தாலம் : அரிவளூர் - செப். 13. வேதாரண்யம் : கோடியக்காடு - செப். 20. நாகப்பட்டினம் : கோட்டூர் - செப். 27. கீழ்வேளூர் : தேவூர் - செப். 27. திருக்குவளை : நீர்முளை - செப். 27. மயிலாடுதுறை : நீடூர் - செப். 27. சீர்காழி : செம்பதனிருப்பு - செப். 27. தரங்கம்பாடி : நரசிங்கநத்தம் - செப். 27.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com