தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி சார்பில் கொடிநாள் நிதியாக ரூ.10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் வியாழக்கிழமை
வழங்கினார்.
முன்னாள் ராணுவ வீரர்களின் நலனுக்காக கொடி நாள் நிதிக்காக , தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மாணவர்கள் உண்டியல் மூலம் ரூ.10 ஆயிரம் வசூல் செய்தனர். இந்நிலையில், தருமையாதீனத்துக்கு வியாழக்கிழமை வந்த நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமாரிடம், இந்நிதியை தருமையாதீனம் 26-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக பரமாசார்ய சுவாமிகள்
வழங்கினார்.
அப்போது, தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், கல்லூரியின் செயலாளர் ஆர். சிவபுண்ணியம், முதல்வர் எஸ். சுவாமிநாதன், முன்னாள் முதல்வர் எம். திருநாவுகரசு, கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் துரை. கார்த்திகேயன் ஆகியோர்கள் உடனிருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி கணிப் பொறித் துறைத் தலைவர் செந்தில்குமார், இயற்பியல் துறைத் தலைவர் செந்தில்குமரன், லியோ சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.