தீ விபத்தில் 3 வீடுகள் சேதம்

நாகை அருகேயுள்ள பொரவாச்சேரியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் சேதமடைந்தன.

நாகை அருகேயுள்ள பொரவாச்சேரியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் சேதமடைந்தன.
பொரவாச்சேரி, கீழத்தெருவில் வசிப்பவர் தனிக்கொடி மகன் சுந்தரபாண்டியன் (40). இவரது வீட்டில் சனிக்கிழமை இரவு மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. தீ விபத்தையடுத்து வீட்டில் இருந்த எரிவாயு உருளை வெடித்துள்ளது. இதையடுத்து அருகில் வசித்த சிவானந்தம் மனைவி பொன்மணி (51), அப்துல் ரஹ்மான் மகன் ஜாகீர் உசேன் (45) ஆகியோரது வீடுகளிலும் தீ பரவியுள்ளது.
பின்னர், நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், அவர்கள் விரைந்து வந்து, தீயை கட்டுக்குள் கொண்டு
வந்தனர். இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com