நாகையில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 21, 22 -இல் நடைபெறுவதாக இருந்த மாணவர் கலந்தாய்வு சேர்க்கை ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நாகை, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக் குழுத் தலைவர் சண்முகம் கூறியிருப்பது :
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மீன்வள அறிவியல் (பிஎப்எஸ்ஸி) பட்டப்படிப்புக்கு ஜூலை 21 -ஆம் தேதியும், இளநிலை மீன்வளப் பொறியியல் (பிஇ) பட்டப்படிப்புக்கு ஜூலை 22 -ஆம் தேதியும் நடைபெறுவதாக இருந்த மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது. கலந்தாய்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.