வேளாங்கண்ணியில் பொதுமக்களுக்கு இடையூறாக தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த 3 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வேளாங்கண்ணியில் போலீஸார் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், கருங்கண்ணியைச் சேர்ந்த மதிவாணன் (44), காமேஸ்வரத்தைச் சேர்ந்த கணேசன் (38) ஆகியோர் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்தார்களாம். இதேபோல் வேளாங்கண்ணி கடைத்தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக கருங்கண்ணியைச் சேர்ந்த தனபால் (44) கடை வைத்திருந்தாராம். இதுதொடர்பாக, வேளாங்கண்ணி போலீஸார் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்தனர்.