மயிலாடுதுறையில் விஷம் குடித்த இளைஞர் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் ஜெயசூர்யா (26). இவர், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகிய நிலையில் குழந்தை இல்லையாம்.
இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ஜெயசூர்யா கடந்த 23-ஆம் தேதி விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கிக் கிடந்தாராம்.
இதையடுத்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.