நாய்கள் விரட்டியதால் கடலில் விழுந்த 2 மான்கள் மீட்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் நாய்கள் விரட்டியதால் பயந்துபோய் கடலில் விழுந்த 2 புள்ளிமான்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் நாய்கள் விரட்டியதால் பயந்துபோய் கடலில் விழுந்த 2 புள்ளிமான்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன.
கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் அரிய வகை வெளிமான் இனம் மற்றும் புள்ளிமான்கள் ஏராளமாக உள்ளன. வியாழக்கிழமை பகல் சரணாலய பகுதிக்குள் நுழைந்த நாய்கள், அங்கு இரை தேடிய புள்ளிமான்களை துரத்தியுள்ளன. நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடியபோது 2 புள்ளிமான்கள் கடலில் விழுந்தன. கடல் சீற்றமாக இருந்ததால், அலையில் இழுத்துச் செல்லப்பட்ட 2 மான்களும் தண்ணீரில் தத்தளித்தன. இதையறிந்த வனத்துறையினர், மீனவர்களின் உதவியோடு 2 புள்ளிமான்களையும் மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com