மதுக்கடையை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம்

கீழ்வேளூரை அடுத்த வலிவலத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழ்வேளூரை அடுத்த வலிவலத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வலிவலம் கடைவீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்படுவதாகக் கூறி, டாஸ்மாக் கடை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் நடராஜன் தலைமை வகித்தார். இதையடுத்து டாஸ்மாக் உதவி மேலாளர் வேம்பையன் தலைமையிலான அலுவலர்கள் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com