10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 496 பேர் 480-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில, மாவட்ட அளவிலான ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 480-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றவர்கள், 451 முதல் 480 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள், 426 முதல் 450 வரை மதிப்பெண் பெற்றவர்கள், 401 முதல் 425 வரை மதிப்பெண் பெற்றவர்கள் என 8 பிரிவாக மாணவ, மாணவிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, மாநில அளவில் 480-க்கும் அதிகமான, 480 வரை, 450 வரையிலான மதிப்பெண்கள் பெற்றவர்கள் என்ற முதல் 3 பிரிவுகளில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 4,345 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதில், 480 முதல் 500 வரையிலான மதிப்பெண்கள் பெற்றவர்கள் பட்டியலில் 496 பேர் இடம் பெற்றுள்ளனர். 451 முதல் 480 வரையிலான மதிப்பெண்கள் பெற்றவர்கள் பட்டியலில் 1,839 பேரும், 426 முதல் 450 வரையிலான மதிப்பெண்கள் பெற்றவர்கள் பட்டியலில் 2010 பேரும் இடம் பெற்றுள்ளனர்.