நாகை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளில் 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 88.25.
நாகை மாவட்டத்தில், பார்வையற்றவர்கள், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவர்கள், உடல் ஊனமடைந்தவர்கள் மற்றும் பிற ஊனத்துக்குள்ளானவர்கள் என மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் 68 பேர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதினர். இதில், 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கண்பார்வையற்றவர்கள் 7 பேரும், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவர்கள் 13 பேரும், உடல் ஊனமடைந்தவர்கள் 15 பேரும், பிற வகை மாற்றுத் திறனாளிகள் 25 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மொத்த தேர்ச்சி சதவீதம் 88.25.
மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளில், கண்பார்வையற்றவர்கள் அதிகபட்சமாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவர்கள் 92.86 சதவீதமும், பிற வகை மாற்றுத் திறனாளிகள் 89.29 சதவீதமும், உடல் ஊனமடைந்தவர்கள் 78.95 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.