சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை முதல் மாற்று இடத்தில் செயல்படும் என வட்டாட்சியர் பாலமுருகன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தாலுகா அலுவலகம், நீதிமன்ற அலுவலகம், சார் கருவூலம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான இக்கட்டடம் தற்போது, வலுவிழந்து காணப்படுவதால் அக்கட்டடத்தை இடித்து அதே இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட உள்ளன.
இதனால் வட்டாட்சியர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (நவ.14) முதல் தாற்காலிகமாக இடம் மாற்றம் செய்து பிடாரி தெற்கு வீதியில் உள்ள திருஞானசம்பந்தர் திருமண மண்டபத்தில் செயல்படவுள்ளது. எனவே, வட்டாட்சியர் அலுவலகம் மூலம் வழங்கப்படும் அனைத்துச் சான்றுகள், இ-சேவை மையம் ஆகிய பயன்பாடுகளை தொடர்ந்து தாற்காலிக இடத்தில் செயல்படும் வட்டாசியர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.