கருவாழக்கரை மேலையூர் ஊராட்சியில் அடிப்படை வசதி செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செம்பனார்கோயில் அருகேயுள்ள கருவாழக்கரை மேலையூர் ஊராட்சி பகுதியான மேலத்தெரு, வாய்க்கால் தெரு, அய்யர் தெரு ஆகிய பகுதிகளில் சாலைகள் பள்ளமும், மேடாக உள்ளது. எனவே, உடனடியாக மண் சாலையை தார்ச்சாலை மாற்ற வேண்டும். அய்யர் தெருவில் தூர்வாராமல் உள்ள கிணற்றை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.