யோகா போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

மாநில அளவிலான யோகா போட்டியில் முதலிடம் பெற்ற சீர்காழி மாணவிக்கு புதன்கிழமை பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநில அளவிலான யோகா போட்டியில் முதலிடம் பெற்ற சீர்காழி மாணவிக்கு புதன்கிழமை பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
சீர்காழி ச.மு.இ.மெட்ரிக்பள்ளி 9-ஆம் வகுப்பு  மாணவி சுபானு (14) அண்மையில் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்றார். 
திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று 250-க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து காட்டினர். இதில், மாணவி சுபானு ஆணி படுக்கை மீது அமர்ந்து பல்வேறு ஆசனங்களை குறிப்பிட்ட நேரத்தில் செய்து காட்டினர். இதன்மூலம்,மாநில போட்டியில் முதலிடம் பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ் பெற்றார். 
மாநில போட்டியில் வெற்றி பெற்று சீர்காழிக்கு பெருமை சேர்த்த மாணவி சுபானுவுக்கு சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. எம்எல்ஏ பி.வி. பாரதி மாணவியைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாணவியின் பெற்றோர் மணிவண்ணன், சீதா, அதிமுக வார்டு பொறுப்பாளர் ஆர்.எஸ். பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
மாணவி சுபானு தற்போது உலக சாதனையாக ஆனி படுக்கை மீது அமர்ந்து 15 நிமிடத்தில் 312 ஆசனங்கள் செய்து காட்டியுள்ளார். இதற்கு முன்பு ஆனி மீது 100 ஆசனங்கள் செய்ததே பதிவாகியுள்ளது குறிப்பிடதக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com