ராதாநல்லூர் விவசாயிகளுக்கு கூடுதல் காப்பீடுத் தொகை

திருவெண்காடு அருகேயுள்ள மணிக்கிராமம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின்முலம் ராதாநல்லூர் கிராம விவசாயிகளுக்கு கூடுதல் காப்பீடுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவெண்காடு அருகேயுள்ள மணிக்கிராமம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின்முலம் ராதாநல்லூர் கிராம விவசாயிகளுக்கு கூடுதல் காப்பீடுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். இயக்குநர்கள் ராஜமாணிக்கம்,  தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலர் சாமிசெழியன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி பங்கேற்று, 380 விசாயிகளுக்கு ரூ. 1.05 கோடிக்கான கூடுதல் காப்பீடுத் தொகைக்கான ஆணையை வழங்கிப் பேசினார்.
இதில் ஒன்றிய அதிமுக செயலர் ஜெயராஜமாணிக்கம், இளைஞரணி செலாளர் திருமாறன், வைத்தீஸ்வரன்கோயில் பேருர் செயலாளர் போகர் ரவி, ஊராட்சி செயலாளர் பரமசிவம், ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் உஷா,  சங்க பணியாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சங்க காசாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com