நாகை மாவட்டம், செம்பனார்கோயில் கடைவீதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட துணைச் செயலர் மார்க்ஸ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலர் சீனிவாசன் பங்கேற்று, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். இதில் பஷீர் அகமது, குணா, ஜோதிபாசு, சந்திரமோகன், காசிம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.