உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், நாகை டாடா நகர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு வியாழக்கிழமையையும் டெங்கு விழிப்புணர்வு நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில், நாகை உணவு பாதுகாப்புப் பிரிவு சார்பில் இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் பி.கலா தலைமை வகித்தார். நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் பங்கேற்று, டெங்கு கொசுக்கள் உற்பத்தி மற்றும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆர். மஹாராஜன், அனைவருக்கும் கல்வித் திட்ட மாவட்ட அலுவலக புள்ளியியல் அலுவலர் ப. அந்துவன் சேரல் ஆகியோர் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு குறித்துப் பேசினர்.