லாரி - பேருந்து மோதல்: ஒருவர் காயம்

சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டானாவில் வியாழக்கிழமை காலை லாரியும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டத்தில் ஒருவர் காயமடைந்தார்.

சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டானாவில் வியாழக்கிழமை காலை லாரியும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டத்தில் ஒருவர் காயமடைந்தார்.
காரைக்காலிருந்து சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டானாவில் திரும்பும்போது, சீர்காழி புறவழிச்சாலையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கிச் சென்ற லாரி, பேருந்தின் பின்புற பக்கவாட்டில்  மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ரவுண்டானா தடுப்புக் கம்பியில் மோதி நின்றது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒருவர் காயமடைந்து, சீர்காழி அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். இந்த விபத்தால்,  சீர்காழி - மயிலாடுதுறை - நாகப்பட்டினம்  சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து சீர்காழி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com