டெங்கு  தடுப்பு விழிப்புணர்வு தூய்மைப் பணி

நாகை, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான மீன்வளப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில்

நாகை, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான மீன்வளப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், கல்லூரி வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மீன்வளப் பொறியியல் கல்லூரியின் முதல்வர் சி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, களப் பணியைத் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்கள் 60-க்கும் மேற்பட்டோர்,  குப்பைகளை அகற்றுதல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் மா. ராமர், தே. கேசவன் ஆகியோர் பணிகளை ஒருங்கிணைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com