நாகை, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான மீன்வளப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், கல்லூரி வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மீன்வளப் பொறியியல் கல்லூரியின் முதல்வர் சி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, களப் பணியைத் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்கள் 60-க்கும் மேற்பட்டோர், குப்பைகளை அகற்றுதல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் மா. ராமர், தே. கேசவன் ஆகியோர் பணிகளை ஒருங்கிணைத்தனர்.