நாகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நீச்சல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்ற போட்டிகளை இஜிஎஸ் கல்விக் குழுமச் செயலர் பரமேஸ்வரன், பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட 10 கல்லூரிகளிலிருந்து 150 மாணவியர்களும், 123 மாணவர்களும் இந்த போட்டியில் பங்கேற்றனர்.