மன்னார்குடி அருகே சொத்துத் தகராறில் தம்பதியை அரிவாளால் வெட்டிய சகோதரர்கள் இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஏத்தக்குடி காலனிதெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன்கள் சிவானந்தம், நடராஜன், ஏழுமலை. இவர்களுக்கிடையே பூர்வீகச் சொத்தை பிரிப்பது தொடர்பாக தகராறு இருந்துவந்தது. இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக வியாழக்கிழமை இரவு பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த சிவானந்தமும், நடராஜனும் இணைந்து, ஏழுமலையையும் (47) அவரது மனைவிஅம்சவள்ளியையும் (45) அரிவாளால் வெட்டினராம். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக, தலையாமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து, சிவானந்தம் (65), நடராஜன் (60) ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.