சீர்காழியில் மண் அள்ளிய 5 லாரிகள் சிறைபிடிப்பு

சீர்காழி அருகே நெய்தவாசலில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சனிக்கிழமை மண் எடுத்த 5 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சீர்காழி அருகே நெய்தவாசலில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சனிக்கிழமை மண் எடுத்த 5 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நெய்தவாசல் குப்புச்சிமேட்டுத் திடலில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் 5 லாரிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுக்கப்பட்டு வந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள், 5 லாரிகளையும் சிறைபிடித்தனர். பொக்லைன் இயந்திரத்துடன் அதன் ஓட்டுநர் தப்பிச்சென்றுவிட்டார்.
தகவலறிந்த திருவெண்காடு போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மண் எடுத்த லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதை ஏற்றுக்கொண்ட போலீஸார் 5 லாரிகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com