புரட்டாசி முதல் சனிக்கிழமை: தாடாளன் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சீர்காழியில் திருவிக்கிரம நாராயண பெருமாள் எனும் தாடாளன் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு லோகநாயகி தாயாருடன் பெருமாள் காட்சி தருகிறார். இக்கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சீர்காழி வீரஆஞ்சநேயர் கோயில், அண்ணன் கோயில் அண்ணன்பெருமாள்கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com