ஆவண எழுத்தர்கள் வேலை நிறுத்தம்

பத்திரப் பதிவுத்துறையில் போதிய பயிற்சி இல்லாமல் ஆன்லைன் சேவை அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து,

பத்திரப் பதிவுத்துறையில் போதிய பயிற்சி இல்லாமல் ஆன்லைன் சேவை அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீர்காழியில் ஆவண எழுத்தர்கள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
சீர்காழி பத்திரப் பதிவு அலுவலகத்தில் போதிய பயிற்சி பெற்ற பணியாளர்கள் இருவரை கூடுதலாக நியமிக்க வேண்டும், ஆன்லைன் பதிவுக்குத் தேவையான வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி, இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது.
வேலை நிறுத்தம் காரணமாக, பத்திரப் பதிவு, திருமணப் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் பெறுவது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com