நாகப்பட்டினம்
காலமானார் பி.வி. பத்மாவதிஆச்சி
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் கருப்பம்புலம் பி.வி.தேவரின் மனைவி பத்மாவதிஆச்சி (89) உடல் நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் கருப்பம்புலம் பி.வி.தேவரின் மனைவி பத்மாவதிஆச்சி (89) உடல் நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
இவருக்கு முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் பி.வி. குழந்தைவேல், மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி. இராசேந்திரன் ஆகிய இரண்டு மகன்கள், 5 மகள்கள் உள்ளனர்.
பத்மாவதி ஆச்சியின் இறுதி ஊர்வலம் வேதாரண்யம் பயணியர் மாளிகை சாலைப் பகுதியில் உள்ள இல்லத்திலிருந்து புதன்கிழமை மாலை 3 மணிக்கு புறப்பட்டு, கருப்பம்புலம் கிராமத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும்.