சுப்பையா நடுநிலைப் பள்ளிக்கு விருது 

வேதாரண்யம், பயத்தவரன்காடு சுப்பையா நடுநிலைப்பள்ளி, நாகை மாவட்ட அளவில் சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான விருது பெற்றுள்ளது.

வேதாரண்யம், பயத்தவரன்காடு சுப்பையா நடுநிலைப்பள்ளி, நாகை மாவட்ட அளவில் சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான விருது பெற்றுள்ளது.
நாகை மாவட்டத்தில் 2016-17 ஆம் கல்வியாண்டில் சிறந்த நடுநிலைப் பள்ளியாக பயத்தவரன்காடு சுப்பையா நடுநிலைப் பள்ளி தேர்வு பெற்றது. இதற்கான விருதை  சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் தலைமையாசிரியர் இராஜேஸ்வரி சந்திரமோகனிடம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.  விருது பெற்றமைக்காக இப்பள்ளியின் ஆசிரியர்கள் 9 பேரையும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள்  இராமமூர்த்தி, இராஜமாணிக்கம், பள்ளி செயலர் எஸ்.எஸ். தென்னரசு, பள்ளி முகவர் சந்திரமோகன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் புயல்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வைரமுத்து ஆகியோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com