வேதாரண்யம், பயத்தவரன்காடு சுப்பையா நடுநிலைப்பள்ளி, நாகை மாவட்ட அளவில் சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான விருது பெற்றுள்ளது.
நாகை மாவட்டத்தில் 2016-17 ஆம் கல்வியாண்டில் சிறந்த நடுநிலைப் பள்ளியாக பயத்தவரன்காடு சுப்பையா நடுநிலைப் பள்ளி தேர்வு பெற்றது. இதற்கான விருதை சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் தலைமையாசிரியர் இராஜேஸ்வரி சந்திரமோகனிடம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். விருது பெற்றமைக்காக இப்பள்ளியின் ஆசிரியர்கள் 9 பேரையும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் இராமமூர்த்தி, இராஜமாணிக்கம், பள்ளி செயலர் எஸ்.எஸ். தென்னரசு, பள்ளி முகவர் சந்திரமோகன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் புயல்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வைரமுத்து ஆகியோர் பாராட்டினர்.