துலாக்கட்ட காவிரியில் பனி லிங்க சிறப்பு வழிபாடு 

மகா சிவராத்திரியையொட்டி, மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி பகுதியில் உள்ள காவிரித்தாய் சிலை முன்பு கோபூஜை மற்றும் பனி லிங்க சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை இரவு  நடைபெற்றன.

மகா சிவராத்திரியையொட்டி, மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி பகுதியில் உள்ள காவிரித்தாய் சிலை முன்பு கோபூஜை மற்றும் பனி லிங்க சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை இரவு  நடைபெற்றன.
துலாக்கட்ட காவிரிக் கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள  காவிரித்தாய் சிலை முன்பு நகர பாஜக தலைவர் மோடி. கண்ணன் ஏற்பாட்டின்பேரில் பனி லிங்கம்  வைக்கப்பட்டு, அதற்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. முன்னதாக அங்கு கோ பூஜை   நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பி. கலிதீர்த்தான், நாகை மாவட்ட பாஜக பொதுச் செயலர் நாஞ்சில். பாலு, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த  அழகிரிசாமி மற்றும் ஆன்மிகப் பற்றாளர்கள், பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com