வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் சீதாலெட்சுமி உயர்நிலைப் பள்ளி, உதவி தொடக்கப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் தேர்தலுக்கு பள்ளிச் செயலர் இரா. கிரிதரன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் ரவிவர்மன், பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இத்தேர்தலில், சீதாலெட்சுமி உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக புதிய தலைவராக சுப்பிரமணியன், செயலாளராக தலைமையாசிரியர் பபிதாபானு, பொருளாளராக கிரிதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக வேதரெத்தினம், பழனியப்பன் நல்லதம்பி, இணைச் செயலாளர்களாக செந்தில்குமார்,விமலா ஆகியோர் தேர்வு பெற்றனர்.
இதேபோல், சீதாலெட்சுமி உதவித் தொடக்கப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக முருகவேல், செயலாளராக தலைமையாசிரியர் கருணாநிதி, பொருளாளராக கிரிதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைப் பொறுப்பாளர்களாக ராசேந்திரன், மீரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.