முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் பிப். 23-ஆம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கி நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து தீர்வுப் பெறலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.