நாகப்பட்டினம்
பருவ நிலை மாற்றங்கள் மேலாண்மை பயிற்சி
குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பருவ நிலை மாற்றங்கள் குறித்து மேலாண்மை பயிற்சி முகாம் பிப்.13,14 தேதிகளில் நடைபெற்றது.
குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பருவ நிலை மாற்றங்கள் குறித்து மேலாண்மை பயிற்சி முகாம் பிப்.13,14 தேதிகளில் நடைபெற்றது.
பயிற்சிக்கு ஒன்றிய ஆணையர் வி. கோவிந்தராஜன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சன் வரவேற்றார். மாநில பயிற்றுநர் ஜான்பெஞ்சமின், மண்டல ஊரக பயிற்சி நிறுவன பயிற்றுநர்கள் கலைமணி, மேகலா ஆகியோர் முகாமில் பருவநிலை மாற்றங்களின்போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளித்தனர். உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சிச் செயலர்கள், பணித்தளப் பொறுப்பாளர்கள் என ஒரு தொகுப்புக்கு 30 பேர் என 5 தொகுப்பில் 148 பேர் பயிற்சியில் பங்கேற்றனர்.