குத்தாலம் ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் சத்துணவு அமைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றிய ஆணையர் வி. கோவிந்தராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில், பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் பப்பாளி மற்றும் முருங்கை மரக்கன்றுகள் மற்றும் சமையல் பாத்திரங்களை வழங்கி, சத்துணவு அமைப்பாளர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு வந்து தாமதமின்றி தரமான உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும், சமையலர்களிடம் சமையலறையை சுகாதாரமாக வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும் என்றார் அவர்.