சீர்காழி தென்பாதியில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, சீரடி சாய் பாபாவுக்கு மஞ்சள், திரவியம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, ஆரத்தி வழிபாடும், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.