மயிலாடுதுறை அருகேயுள்ள சித்தர்க்காட்டில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனச் செயல்பாடுகள் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
சித்தர்க்காடு தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் பி.சி. சரவணன் தலைமை வகித்தார்.
மயிலாடுதுறை உதவி வேளாண் இயக்குநர் சி. சுப்பையன், ஓய்வு பெற்ற கிடங்கு மேலாளர் முத்துமாலை ஆகியோர் பயிற்சியில் பேசினர். பயிற்சியில் பங்கேற்ற மயிலாடுதுறை பகுதி விவசாயிகளுக்கு தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனச் செயல்பாடுகள் குறித்த கையேடுகள் மற்றும் கைவிசைத் தெளிப்பான்கள் வழங்கப்பட்டன.