மயிலாடுதுறையில் ரத்த தான முகாம்

மயிலாடுதுறையில் விழுதுகள் ரத்த தான சேவை மையம் சார்பில் 4-ஆம் ஆண்டு ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் விழுதுகள் ரத்த தான சேவை மையம் சார்பில் 4-ஆம் ஆண்டு ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுதுகள் அமைப்பின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறையில் ரத்த தான சிறப்பு முகாம் மற்றும் பள்ளி கல்லூரி மாணவியர்களுக்கான மினி மாரத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன.
விழாவின், முதல் நாள் நிகழ்ச்சியாக, மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் உள்ள அரசு அலுவலர்கள் சங்கக் கட்டடத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவவர் டாக்டர் என். சிவக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர், அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு ரத்த தானத்தைப் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத் தலைவர் ஏ. சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழுதுகள் ரத்த தான சேவை மையத் தலைவர் ஜெ. சூர்யா, செயலர் ஆர். தமிழரசன், பொருளாளர் டி. ராகுல்ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
மினி மாரத்தான் போட்டி மயிலாடுதுறையை அடுத்துள்ள மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி முன்பிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8- மணிக்கு தொடங்கும் என விழுதுகள் அமைப்பினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com