நாகப்பட்டினம்
விவேகானந்தரின் உருவப் படத்துக்கு மலரஞ்சலி
மயிலாடுதுறையில், வீரத்துறவி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு வெள்ளிக்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மயிலாடுதுறையில், வீரத்துறவி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு வெள்ளிக்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மயிலாடுதுறை கிட்டப்பாஅங்காடி அருகில், பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டப் பொதுச் செயலர் நாஞ்சில் பாலு தலைமை வகித்தார். விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படம் வைக்கப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கட்சியின் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிப் பொறுப்பாளர் கோவி. சேதுராமன், ஆர்.எஸ்.எஸ். கோட்டப் பொறுப்பாளர் நாராயணன், பாஜக நகரத் தலைவர் மோடி. கண்ணன், துணைத் தலைவர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.