தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நாகை மாவட்டம், கீழ்வேளூரில் மார்ச் 16 -ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து நாகை சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் அலுவலர் ம. ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், தொழிலாளர் துறை மூலம் நலவாரிய உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் மார்ச் 16 -ஆம் தேதி நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், தகுதியான தொழிலாளர்கள் பங்கேற்று, நலவாரிய உறுப்பினர்களாகப் பதிவு பெற முனைப்புக் காட்டுமாறு அவர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.